டெங்கு, சிக்கன்குனியா ஆகியன பாடசாலைகளில் பரவுவதைத் தடுக்க கல்வி அமைச்சு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
புதிய அறிவுறுத்தல்களின்படி, ஆய்வுகளின் போது பாடசாலை வளாகத்தில் நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் கண்டறியப்பட்டால், பாடசாலை அதிபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் கல்வி நடவடிக்கைகளை இடையூறு இல்லாமல் தொடர வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.