இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கட்டார் மன்னர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி பெப்ரவரி 17 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.
மார்ச் 2015 இல் அரசு முறைப் பயணத்தைத் தொடர்ந்து, இந்த விஜயம் அவரது இரண்டாவது இந்தியப் பயணமாகும்.
வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) கூற்றுப்படி, அமீருடன் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு இந்தியாவுக்குச் செல்லும்.