கடல் கொந்தளிப்பால் பலப்பிட்டி கடற்கரையில் டிங்கி படகில் சிக்கித் தவித்த மூன்று மீனவர்கள் இலங்கை விமானப்படையினரால் (SLAF) மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிக்காகஇ ரத்மலானாவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டதாக விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் பேரில் இந்த மீட்புப் பணி நடத்தப்பட்டதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது கடுமையான பாதகமான வானிலை நிலவி வருகிறது, கடல் கொந்தளிப்பாகவும் பலத்த காற்று வீசும் என்பதால் கடற்படை மற்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது