அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பானத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியினுவதற்கான கட்டுப்பணத்தை யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவ மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய கட்சி இன்றைக்கு யாழில் கட்டுப் பணம் செலுத்தி இருந்தாலும் தொடர்ந்து வடக்கு கிழக்கு முழுவதும் கட்டுப்பணம் செலுத்தி வேட்புமனுக்களையும் தாக்கல் செய்ய உள்ளது.
எங்களது கட்சியின் தலைவருடன் பல தரப்பினரும் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சு முயற்சிகளில் எங்களது நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக கூறி வருகின்றோம்.
பேச்சு வார்த்தைகளில் ஒரு முன்னேற்றம் ஏற்படும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த தரப்புக்களோடு முழுமையான ஒரு இணக்கம் ஏற்பட்ட பின்னர் யார் யார் என்ற அந்த விபரங்களை அறிவிப்போம். அவ்வாறு ஒரு புதிய கூட்டு அமைந்தாலும் எங்களுடைய சைக்கிள் சின்னத்தில் தான் வடக்கு கிழக்கில் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் எம்முடன் இதுவரையிலர பேசிய தரப்புக்கள் எமது இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் பேச்சுக்கள் தொடர்வதால் முழுவிபரங்களையும் இப்போதைக்கு எம்மால் கூற முடியாவிட்டாலும் விரைவில் இந்தக் கூட்டு தொடர்பில் கட்சியின் தலைவர் அறிவிப்பார் – என்றார்.