மேற்கு வங்காளத்தின் துர்காபூர் விரைவுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் கங்குலியின் கார் விபத்தில் சிக்கியது.
தண்டன்பூரில் நடந்த இந்த சம்பவம், கங்குலியின் வாகன கான்வாயை ஒரு லாரி திடீரென முந்திச் சென்றதால், ஓட்டுநர் திடீரென பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதனால், கங்குலியின் வாகனத்தின் பின்னால் இருந்த கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன, அவற்றில் ஒன்று கங்குலியின் காரை மோதியது.அதிர்ஷ்டவசமாக, விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், கங்குலியின் பாதுகாப்புக்காகச் சென்ற இரண்டு கார்கள் சிறிய அளவில் சேதமடைந்தன.
விபத்தினால், சௌரவ் கங்குலி பர்த்வான் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு சுமார் 10 நிமிடங்கள் சாலையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும் மாற்று ஏற்பட்டவுடன், அங்கு அவர் விழாவில் கலந்து கொண்டார்.
Trending
- போதைவஸ்த்து அற்ற எதிர்காலத்துக்காக நடைபயணம்
- யாழ் – நீதிமன்ற அருகில் வைத்து யுவதி கடத்தல்
- வடமராட்சி கிழக்கில் நிதி சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கு
- சர்வதேச விருது பெற்ற இலங்கையரான செல்வின் தாஸ்
- இந்தியாவுக்குச் செல்லும் குழுவை சந்தோஷ் ஜா சந்தித்தார்
- கந்தசுவாமி ஆலயம் முன் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை நீக்கம்
- மே மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு
- இலங்கையின் 53ஆவது குடியரசு தினம் இன்று