மேற்கு வங்காளத்தின் துர்காபூர் விரைவுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் கங்குலியின் கார் விபத்தில் சிக்கியது.
தண்டன்பூரில் நடந்த இந்த சம்பவம், கங்குலியின் வாகன கான்வாயை ஒரு லாரி திடீரென முந்திச் சென்றதால், ஓட்டுநர் திடீரென பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதனால், கங்குலியின் வாகனத்தின் பின்னால் இருந்த கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன, அவற்றில் ஒன்று கங்குலியின் காரை மோதியது.அதிர்ஷ்டவசமாக, விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், கங்குலியின் பாதுகாப்புக்காகச் சென்ற இரண்டு கார்கள் சிறிய அளவில் சேதமடைந்தன.
விபத்தினால், சௌரவ் கங்குலி பர்த்வான் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு சுமார் 10 நிமிடங்கள் சாலையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும் மாற்று ஏற்பட்டவுடன், அங்கு அவர் விழாவில் கலந்து கொண்டார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!