இந்திய கிறிக்கெற் விரரான ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியான முதுகு விறைப்பு சோர்வு காரணமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெர கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக லக்னோவில் அவுஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இருந்து அவர் விலகிய பிறகு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் இந்தத் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நலப் பிரச்சினைகள் ஒரு பெரிய கவலையாக உள்ளன. ஒரே நேரத்தில் நான்கு நாட்களுக்கு மேல் களத்தில் இருக்க முடியாது அவதிப்படுகிறார்.
கடந்த சீசனின் ரஞ்சி டிராபி போட்டிகளில் ஓய்வு எடுக்கலாம் என்றும், ஆனால் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டிகள் அல்லது இந்தியா ஏ போட்டிகளின் போது அதையே செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.
இதன் விளைவாக, ஐயர் தனது உடல் மீண்டும் நீண்ட வடிவங்களில் விளையாட தயாராகும் வரை ரெட்-பால் கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
“ஷ்ரேயாஸ் ஐயர் வரும் மாதங்களில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாட மாட்டார், மேலும் எதிர்காலத்தில் பிசியோக்கள் மற்றும் பயிற்சியாளருடன் கலந்தாலோசித்து தனது உடலை மதிப்பிட்டு அது குறித்து முடிவெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.”
இதன் பொருள், சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஷ்ரேயாஸ் தவறவிடுவார் .
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவறவிட்ட ஷ்ரேயாஸ், விண்டீஸ் தொடருக்கான போட்டியில் இருந்தார்.