ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் 53வது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு ஓட்டத்தால் வெற்ற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 206 ஓட்டங்கள் எடுத்தது.
சுனில் நரேன் 11 , ரஹ்மானுல்லா குர்பாஸ் 35 , அஜிங்க்யா ரஹானே 30,அங்கிரிஷ் ரகுவன்ஷி 44, ஆண்ட்ரே ரஸ்ஸல் 57 ஓட்டங்கள் எடுத்தனர்.
207 எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறி, வைபவ் சூர்யவன்ஷி , துருவ் ஜூரெல் ஆகியோரை விரைவாக இழந்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்34,, ரியான் பராக் ஆகியோர் 95 ஓட்டங்கள் எடுத்து எடுத்து அணியை மீட்டனர். ஷிம்ரான் ஹெட்மியர் 29 ஓட்டங்கள் எடுத்தனர். னால் கீழ் வரிசை வீரர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர்.
ராஜஸ்தான் அணிக்கு இறுதிப்பந்தில் மூன்று ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் ரன் அவுட் ஆனார். இதனால் கேகேஆர் அணிக்கு த்ரில் வெற்றி கிடைத்தது.
வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் மொயீன் அலி ஆகியோர் கேகேஆர் அணிக்காக சிறப்பாக பந்துவீசி தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.