80வது ஐ.நா. பொதுச் சபை அமர்வின் தலைவராக ஜெர்மனியின் முன்னாள் ளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.பேர்பாக்கின் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது. பதிவான 188 வாக்குகளில் 167 வாக்குகளை அவர் பெற்றார். பதினான்கு உறுப்பு நாடுகள் வாக்களிக்கவில்லை. கேரூனின் தற்போதைய பொதுச் சபைத் தலைவர் பிலிமோன் யாங்கிற்குப் பிறகு, அவர் செப்டம்பர் 2025 இல் புதிய பதவியை ஏற்றுக்கொள்வார்.
டிசம்பர் 2021 முதல் மே 2025 வரை ஜேர்மனின் கூட்டாட்சி வெளியுறவு அமைச்சராக பேர்பாக் பணியாற்றினார். அவர் 2013 முதல் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் 2018 மற்றும் 2022 க்கு இடையில் பசுமைக் கட்சியின் இணைத் தலைவராக பணியாற்றினார்.
பேர்பாக் டிசம்பர் 15, 1980 அன்று ஹனோவரில் பிறந்தார். அவர் ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், லண்டன் பொருளாதாரம் , அரசியல் அறிவியல் பள்ளியில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.