இந்திய,பாகிஸ்தான் யுத்தத்தால் இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் நாளை சனிக்கிழமை [17] ஆரம்பமாகிறது. ஐபிஎல் அட்டவனை மாற்றப்பட்டதால்,இங்கிலாந்து,தென் ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா,மேற்கு இந்தியா வீரர்கள் விளையாடமாட்டார்கள்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவும், தென் அபிரிக்காவும் மோத உள்ளன. இங்கிலாந்து, மேற்கு இந்தியா ஆகியவற்றுக்கிடையேயான ஒரு நாள் போட்டியும் ஆரம்பமாக உள்ளது.
வெளியேறும் சுமார் 20 வீரர்களுக்காக தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்று வீரர்கள் நடந்து வரும் ஐபிஎல் 2025 சீசனில் மட்டுமே பங்கேற்க முடியும், மேலும் 2026 இல் அணிகளால் தக்கவைத்துக் கொல்வதற்கு தகுதி பெற மாட்டார்கள்.அதற்கு பதிலாக, அவர்கள் ஐபிஎல் 2026 மினி ஏலத்தின் மூலம் மீண்டும் நுழைய வேண்டும். அடுத்த சீசனில் அசல் வீரரை மீண்டும் கொண்டு வரும் விருப்பத்தை உரிமையாளர்கள் தக்க வைத்துக் கொள்வார்கள்.
உதாரணமாக, டெல்லி கப்பிடல்ஸ் அணியின் மிட்செல் ஸ்டார்க் விலகினால், அணி ஒரு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யலாம்.ஆனால் அடுத்த சீசனில் அந்த வீரரை தக்கவைக்க முடியாது, இருப்பினும் ஸ்டார்க்கை தக்கவைத்துக்கொள்ளலாம்.
முக்கியமாக, சீசன் பாதியில் நிறுத்தப்படுவதற்கு முன்பு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் தக்கவைத்துக்கொள்ள தகுதியுடையவர்களாகவே இருப்பார்கள்.
அந்தக் காலகட்டத்தில் டெவால்ட் பிரெவிஸ் , ஆயுஷ் மத்ரே போன்ற வீரர்களை அணியில் சேர்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள், 2026 இல் அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.