ஐக்கிய அரபுகள் இராஜியத்தில் நடைபெறும் உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்கஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (10) பயணமானார்.
இந்த விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார்.
மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்படும்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத்துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்.
Trending
- 4600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் வெளியேற்றம் – நளிந்தஜெயதிஸ்ஸ தெரிவிப்பு
- ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
- பதுளையில் தம்பியை வாளால் வெட்டிய சம்பவம்
- வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜரானார் கெஹெலியவின் மகன்
- மூன்று வாகனங்கள் மோதியதில் 7 பேர் காயம்
- கடற்படைத் தளபதியுடன் இஸ்ரேல் தூதரக அதிகாரி பேச்சுவார்த்தை
- துணை மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தம்