ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 17 வாகனங்கள் நேற்று வியாழக்கிழமை (மே 15) இரண்டாம் கட்டமாக ஏலம் விடப்பட்டபோது 200 மில்லியன் ருப்பாவுக்கும் அதிகம் விலையானதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதி, அரசியலமைப்பின் பிரிவு 41(1) இன் கீழ் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் , ஊழியர்கள் பாவித்த 26 வாகனங்கள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டன. இவற்றில், 17 வாகனங்கள் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டன.
அரசாங்க செலவினங்களைக் குறைத்து நிதிப் பொறுப்பை ஊக்குவிக்கும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.
இந்த வாகனங்களை வாங்குவதற்கு அதிக தேவை இருந்தது, நேற்று நடைபெற்ற ஏலத்தில் அவற்றின் விற்பனை மூலம் ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டது.
இந்த ஏலத்தில் 108 ஏலதாரர்கள் பங்கேற்றனர்.