பங்களாதேஷில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொதுத் தேர்தலை நடைபெறும் என பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தெரிவித்துள்ளார்.
84 வயதான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், இடைக்கால நிர்வாகத்தால் செய்யப்பட்ட முக்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், ஏப்ரல் முதல் பாதியில் தேர்தல் நடைபெறும் என்று வெள்ளிக்கிழமை கூறினார்.
ஒரு வருட அரசியல் எழுச்சிக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், அரசாங்கத்தின் வேலை ஒதுக்கீடு முறை மீதான அதிருப்தியால் உருவான போராட்டங்கள், பிரதமர் ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற்றியது.
கொந்தளிப்பைத் தொடர்ந்து, முகமது யூனுஸை தலைமை ஆலோசகராகக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவபட்டது குறிப்பிடத்தக்கது.