உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தேர்தல் ஆணையம் மறுநாள் வேட்புமனுக்களை மீண்டும் கோரும். குறைந்தபட்ச நாட்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஏப்ரல் 11 ஆம் திகதி தேர்தல் நடத்தப் பட வேண்டும். ஆனால் அந்த திகதியில் தேர்தலை நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
உள்ளூராட்சி தேர்தலுக்கு 340 வகையான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டும், இதற்கு குறைந்தபட்ச நேரம் போதுமானதாக இருக்காது.தமிழ்,சிங்கள் புத்தாண்டு காரணமாக ஏப்ரல் 11 ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன.
இந்த சூழ்நிலையில், தேர்தல் ஏப்ரல் 20 முதல் 30 ஆம் திகதிக்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.