இலங்கை முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக எட்டு மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
புத்தளம், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி , கேகாலை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை,பலத்த காற்றினால் மொத்தம் 1,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பான சம்பவங்கள் காரணமாக எட்டு பேர் காயமடைந்துள்ளனர், 325 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று பேரிடர் மேலன்மை மையம் தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேற்கு மாகாணம், சப்ரகமுவ , காலி, மாத்தறை, நுவரெலியா கண்டி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.