ஊழலற்ற மக்களாட்சியை எதிர்பார்க்கும் மக்களுக்கான சிறந்ததொரு ஆட்சியை செய்வதற்கான ஆணையை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னத்திற்கு வழங்கி சம்மாந்துறை பிரதேச சபையைத் தாருங்கள் என்று நாபீர் பெளண்டேஷன் ஸ்தாபகத் தலைவர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்களின் பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றவர்களை நாம் தெரிவு செய்யவேண்டும். வெறும் பொய்களுக்கும், கட்டுக்கதைகளுக்கும் மக்கள் தொடர்ந்து ஏமாறக்கூடாது.உள்ளூராட்சி சபையின் ஆட்சி என்பது ஒரு குட்டி அரசாங்கம் போன்றது. இந்த குட்டி அரசாங்கத்திற்கு, கடந்த காலங்களில் சிறுபான்மை கட்சிகளுக்கு
சம்மாந்துறை மக்கள் ஆணை வழங்கியதனூடாக அடைந்த நன்மைகள் என்ன?.
ஏமாற்று அரசியலை சம்மாந்துறை மண்ணில் விதைத்த சிறுபான்மைக் கட்சிகளுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் சரியான பாடத்தை எமது மக்கள் புகட்டினார்கள். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு வாக்களித்ததினூடாகவும் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை சம்மாந்துறை மண்ணும் மக்களும் இப்போது உணர்ந்துள்ளார்கள் என்றார்.