உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதாக ஆர்ஜென்ரீனா அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டொலர் நிதியை ஆர்ஜென்ரீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும்.
கொரோனா உட்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரப் பிரச்சினைகள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்த ட்ரம்ப், உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படத் தவறிவிட்டதாகத் தெரிவித்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் முடிவை ஆர்ஜென்ரீனா ஜனாதிபதி ஜேவியர் மிலே எடுத்துள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் நேற்று புதன்கிழமை(05) அறிவித்தார்.
“தொற்றுநோய் காலத்தில் சுகாதார முகாமைத்துவத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் இறையாண்மையில் ஒரு சர்வதேச அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு