உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதாக ஆர்ஜென்ரீனா அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டொலர் நிதியை ஆர்ஜென்ரீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும்.
கொரோனா உட்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரப் பிரச்சினைகள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்த ட்ரம்ப், உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படத் தவறிவிட்டதாகத் தெரிவித்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் முடிவை ஆர்ஜென்ரீனா ஜனாதிபதி ஜேவியர் மிலே எடுத்துள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் நேற்று புதன்கிழமை(05) அறிவித்தார்.
“தொற்றுநோய் காலத்தில் சுகாதார முகாமைத்துவத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் இறையாண்மையில் ஒரு சர்வதேச அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
Trending
- நுரையீரலின் செயற்திறனை அதிகரிக்கும் சுவாச பயிற்சிகள்
- டெங்கு நோயாளர் தொகை 6,000 ஐ தாண்டியுள்ளது
- புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த இந்தியாவின் ஒப்புதல் தேவை
- குருணாகலில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
- கோலிக்கு எதிராக பொலிஸில் புகார்
- காட்டுத்தீயின் புகையால் காற்றின் தரம் மோசமாகிறது
- கென்யாவில் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினம்
- இந்தியாவின் உதவியுடன் ஊர்காவற்துறையில் வழங்கப்பட்ட வலைகளும் உலர் உணவு பொருட்களும்