Thursday, February 5, 2026 10:30 pm
அபுதாபியில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனும் ரஷ்யாவும் 314 கைதிகளைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் வியாழக்கிழமை அறிவித்தார்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, உக்ரைன் , ரஷ்ய எல்லையில் உள்ள ரஷ்ய நட்பு நாடான பெலாரஸில், ரஷ்ய கொடிகளால் போர்த்தப்பட்ட விடுவிக்கப்பட்ட போர்க் கைதிகள் பஸ்ஸில் ஏறும் வீடியோவை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டது , இது ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 157 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் “விரிவானதாகவும், பயனுள்ளதாகவும்” இருந்ததாக விட்காஃப் கூறினார். “குறிப்பிடத்தக்க பணிகள் மீதமுள்ள நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் நீடித்த இராஜதந்திர ஈடுபாடு உறுதியான முடிவுகளை வழங்குகின்றன என்பதையும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன என்பதையும் நிரூபிக்கின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் “எதிர்காலத்தில்” தொடரும் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கியேவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

