உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதையும், அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மீட்டெடுப்பதையும், நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய , அமெரிக்கா ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் இன்று செவ்வாய் கிழமை (18) சவூதி அரேபியாவின் ரியாத்தில் சந்திக்க உள்ளனர்.
இந்தச் சந்திப்பு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான சந்திப்புக்கு அடித்தளத்தை அமைக்கக்கூடும் என்று ரஷ்யா திங்களன்று உறுதிப்படுத்தியது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் , புட்டினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் ரஷ்யா சார்பாக பங்கேற்பார்கள்.
அமெரிக்கா சார்பாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ட்ரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.