ஈரான் மீதான இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச விமானப் பயணம், குறிப்பாக ஏர் இந்தியாவால் இயக்கப்படும் விமானங்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்துள்ளன.
பதட்டமான புவிசார் அரசியல் சூழ்நிலை ஈரான், ஈராக் அருகிலுள்ள பகுதிகளின் வான்வெளியை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது.இதனால் ஏர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க அளவு வழித்தடங்கள் மாற்றப்பட்டு நீண்ட தூர விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலைய நடவடிக்கைகள் நிலையானதாக இருந்தாலும், சில விமான அட்டவணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலையம் எக்ஸ் தளத்தில் ஒரு பொது அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகள் உடனடி அப்டேட்களுக்கு நேரடியாக விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளவும், துல்லியமான தகவல்களுக்கு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்கள் , இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
Trending
- ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்
- அஹமதாபாத் விமான விபத்து ‘Black box’ மீட்கப்பட்டது
- இந்திய வரலாற்றில் விலையுயர்ந்த விமான விபத்து
- நெறிமுறையற்ற தந்திரோபாயங்களை NPP செய்தது – மனோ கணேசன்
- ஐரோப்பிய விமான வழித்தடத்தை மாற்றியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
- ஈரான் வான்வெளி மூடப்பட்டதால் ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதிப்பு
- “ரஜ உப்பு” ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
- அவசரமாகத் தரை இறங்கிய ஏர் இந்திய விமானம்