அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு ஈரானை எச்சரித்தார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
இல்லையென்றால், ஈரானின் மீதான இஸ்ரேலின் அடுத்தடுத்த தாக்குதல்கள் “இன்னும் கொடூரமானதாக” இருக்கும் என்றும் அச்சுறுத்தினார்.
தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், ஈரானிய தலைவர்களை ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ள வைக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவை தோல்வியடைந்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.
ஈரான் இணங்கவில்லை என்றால் “பெரும் மரணம் , அழிவு” ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் இராணுவத் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.