ஈரானில் போர் வலயத்தில் சிக்கி உள்ள இலங்கை நேபாள மக்களை இந்தியா வெளியேற்ற ஆதரவை வழங்குகிறது
பிராந்திய ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய அரசு #OperationSindhu இன் கீழ், அந்தந்த அரசாங்கங்களின் அதிகாரப்பூர்வ கோரிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கை , நேபாள குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது.
ஈரானில் உள்ள இந்திய தூதரகம், தற்போது ஈரானில் உள்ள இலங்கை , நேபாள நாட்டினருக்கு உதவுவதாக அறிவித்துள்ளது.
ஈரானில் உள்ள இலங்கை குடிமக்கள் பின்வரும் வழிகள் மூலம் இந்திய தூதரகத்தை அவசரமாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:
அவசர தொலைபேசி எண்கள்:
+98 901 014 4557
+98 912 810 9115
+98 912 810 9109
இந்திய மாணவர்களின் வெளியேற்றத்துக்கான ஈரான் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது வான் பரப்பைத் திறந்தது.