ஈரானுடனான இஸ்ரேலின் ஏவுகணை யுத்தம் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், எந்த சூழ்நிலையிலும் இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் மக்களை எச்சரிக்கிறது.
வெள்ளிக்கிழமை, வெளியுறவு அலுவலகம் இஸ்ரேலின் பெரும்பகுதிக்கு “அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்தும்” குறித்து எச்சரித்தது .
காசா, மேற்குக் கரை,கோலான் ஹைட்ஸ் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் ஏற்கனவே சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டன, இந்தப் பகுதிகளுக்குப் பயணம் செ ய்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கைகள் இருந்தன.
ஆனால் அரசாங்கம் இப்போது நாட்டின் மீதமுள்ள பகுதிகளுக்கான எச்சரிக்கையை சிவப்பு நிறமாக மாற்றியுள்ளது.