காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 27 கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பல வாரங்களாக காஸா பகுதியில் முற்றுகையிட்டு வரும் இஸ்ரேல், அங்கு ஒரு புதிய உதவி விநியோக ஆட்சியை திணிக்க முயற்சிக்கும் வேளையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றன .ரஃபாவில் உள்ள விநியோக மையத்திற்கு அருகில் நியமிக்கப்பட்ட அணுகல் பாதைகளை விட்டு வெளியேறிய தனிநபர்கள் குழு மீது தங்கள் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பத்திரிகையாளர்களால் சுயாதீனமாக கணக்கிட முடியவில்லை, ஆனால் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், ரஃபாவில் உள்ள அதன் கள மருத்துவமனையில் 184 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 19 பேர் வந்தவுடன் இறந்துவிட்டதாகவும், எட்டு பேர் காயங்களால் சிறிது நேரத்திலேயே இறந்ததாகவும் கூறினார்
Trending
- யாழ்ப்பானத்தில் உலக சுற்றாடல் தினம்
- கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் 75 ஆவது ஸ்தாபக தின விழா
- அமெரிக்காவுகுள் நுழைய 12 நாட்டினருக்கு தடை ட்ரம்ப் அதிரடி உத்தரவு
- “செம்மணி புதைகுழி சர்வதேச மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ள வேண்டும்” – யாழில் போராட்டம்!
- நிதி மோசடி தொடர்பில் சீனப் பெண் ஒருவர் கைது!
- கொழும்பு 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
- மீரிகமவில் இடம்பெற்ற விபத்து – ஒருவர் பலி!
- விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை பஸ் சேவை