இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும்கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி எச்சரித்துள்ளார்.
15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் மருத்துவ நிபுணர் கூறினார்.
வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி மேலும் தெரிவிக்கையில்,
“குறிப்பாக பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி.யைப் பொறுத்தவரை, இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.பல இளைஞர்கள் இந்த சமூக ஊடகங்கள் மூலம் கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கின்றனர்.
சிலர் மது ,போதைப்பொருள் பயன்பாட்டை நாடியுள்ளனர். இது போன்ற காரணங்களால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன” என்றார்.
Trending
- பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்க
- தங்காலை பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு 13 பேருக்கு காயம்
- பிரபல நடிகை மாலனி பொன்சேகா காலமானார்
- நுவரெலியாவில் தனியார் பேருந்து விபத்து – 23 பேருக்கு காயம்
- நீரிழிவுநோய் நூல் வெளியீட்டு விழா
- இருபாலை கற்பகப் பிள்ளையார் இரதோற்சவம்
- பொல்ஹேன கடற்கரையில் வாகன தரிப்பு கட்டணம் இடைநிறுத்தம்
- பாராளுமன்ற ஊழியர்களின் மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்வு