இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் துருக்கிய கடற்படைக் கப்பலான TCG Büyükada (F-512) ஐ தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருணா ஜெயசேகரா நேற்று வெள்ளிக்கிழமை[13]பார்வையிட்டார்.துருக்கிய தூதர் செமி லுட்ஃபு துர்குட் கப்பலின் கட்டளை அதிகாரி ஆகியோர் அவரை வரவேற்றனர்.
இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து துருக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். இந்த விஜயத்தில் மூத்த கடற்படை அதிகாரிகள் ,ராஜதந்திர பிரதிநிதிகள் கலந்து கொண்ட கப்பலின் சுற்றுப்பயணமும் அடங்கும்.