இலங்கையில் மின்சாரத்தைத் தடைசெய்த குரங்கு என்ற செய்தி
சர்வதேச தலைப்புச் செய்தியானது.
ஒரு குரங்கு – நாடு தழுவிய மின்வெட்டை ஏற்படுத்தி, முழு நாட்டையும் இருளில் ஆழ்த்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு, இலங்கை இன்று ஞாயிற்றுக்கிழமை ( 9) சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
காலை 11:30 மணியளவில் இலங்கை முழுவதும் மின் தடை ஏற்பட்டது, ஆரம்பத்தில் தொழில்நுட்பக் கோளாறு என்று கருதப்பட்ட இந்த சம்பவம் உண்மையில் குரங்கினால் ஏற்பட்டது என்பதை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 முதல் 6 மணி நேரம் போராடினார்கள். படிப்படியாக பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் திரும்பியது. இந்த மின் தடையின் வினோதமான தன்மை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது, இலங்கையின் குரங்கு எதிர்பாராத சர்வதேச பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
