கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் டிராவல் மார்ட் (PTM) 2025 இல் இலங்கை ஒரு முதன்மையான பயண இடமாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகர் கிறிஸ்டி அகஸ்டின், கராச்சியில் இலங்கையின் கான்சல் ஜெனரல் ஜகத் அபேவர்ண, பாகிஸ்தானுக்கான இலங்கை ஏர்லைன்ஸின் நாட்டு மேலாளர் ருவான் விஜேகோன் , இலங்கை பயண நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், இது பாகிஸ்தானுடனான சுற்றுலா உறவுகளை வலுப்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது என்று அமைச்சு கூறியது.
பாகிஸ்தான் டிராவல் மார்ட் என்பது பிராந்தியத்தில் உள்ள முதன்மையான பயண மற்றும் சுற்றுலா கண்காட்சிகளில் ஒன்றாகும், இது உலகம் முழுவதிலுமிருந்து தொழில் வல்லுநர்கள், சுற்றுலா நடத்துநர்கள் மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது.
இலங்கையின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்குத் தயாராக உள்ள நிலையில், பாகிஸ்தான் டிராவல் மார்ட் 2025 இல் ஈடுபடுவது, அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் பாகிஸ்தானின் பயண மற்றும் விருந்தோம்பல் துறையில் மேம்பட்ட கூட்டாண்மைகள் உள்ளிட்ட நீண்டகால நன்மைகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.