இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இறக்காமம் குளக்கரை விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
மௌலவி அல் -ஹாபீழ் டி.சபியுல்லா அவர்கள் பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.
இப்பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
இப்ராஹிம் நபியின் குடும்பத்தின் தியாகத்தையும், பெருநாள் சிறப்பையும் மௌலவி அல் -ஹாபீழ் டி.சபியுல்லா அவர்கள் குத்பா பிரசங்கத்தில் சிறப்பாக தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.