இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் கொடுத்த புகாரில், “நான் இந்திய அறிவியல் மையத்தின் நீடித்த தொழில்நுட்பப் பிரிவில் பணி புரிந்தேன் கடந்த 2014-ம் ஆண்டு பணியில் இருந்தபோது போலியான பாலியல் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டேன். அப்போது சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே குற்றச்சாட்டை கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியார், சந்தியா விஸ்வரய்யா, ஹரி கேவிஎஸ் தாசப்பா, பலராம் பி, ஹேமலதா மிஸ்ஸி, சத்தோபத்யாய, பிரதீப் சாவ்கர், மனோகரன் ஆகியோர் மீதும் துர்கப்பா முன்வைத்துள்ளார்.
Trending
- ட்ரம்ப் வரிகளை இடைநிறுத்தியதை அடுத்து அமெரிக்க பங்குகள் உயர்ந்தன
- உலகின் நீளமான நாக்கு கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்
- ஏப்ரல் 15 ஆம் திகதி அரசு விடுமுறையா?
- தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அதிரடி
- இந்தியா மீண்டும் நில இணைப்பை முன்மொழிகிறது, ஆனால் இலங்கை இன்னும் உறுதியளிக்கவில்லை
- ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தவர்களைப் பிடித்த கடற்படை
- மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை பெற்றுக்கொடுப்பதே இலக்காகும் – சுதர்சன
- நாபிர் பவுண்டேசனுடன் இணையும் அரசியல் கட்சி வேட்பாளர்கள்