இந்தோனேஷியாவில் புதிதாகக் கட்டப்பட்ட முருகன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2 ஆம்திகதி வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜகார்த்தாவில், ‘ஶ்ரீசனாதன தர்ம ஆலயம்’ என்னும் பெயரில் முருகப்பெருமானுக்குக் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவை ஜகார்த்தா ஆளுநர் தலைமையேற்று நடத்தினார். அந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினர்கள், இந்தியத் தூதர் மற்றும் பல்வேறு மத, கலாசார அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தில் முருகப்பெருமான், விநாயகர், கன்னிகா பரமேஸ்வரி, சிவன் – பார்வதி, மகாவிஷ்ணு – லட்சுமி, பக்த ஆஞ்சநேயர், நவகிரகங்கள், அகஸ்திய முனிவர், இடும்பன் ஆகிய தெய்வங்களுக்குத் தனிச்சந்நிதிகள் அமைந்துள்ளன.40 மீற்றர் உயரம் கொண்ட அழகிய கம்பீரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பர்ய அருங்காட்சியகம் ஒன்றும் அமைப்பட இருக்கிறது. இந்தியா-இந்தோனேசியா கலாசாரத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு