கர்நாடகாவின் கோகர்ணாவில் உள்ள பண்டைய ஸ்ரீ மகாபலேஷ்வரர் கோயிலில், ரஷ்ய இராணுவ வீரர் செர்ஜி கிராப்லெவின் இறுதிச் சடங்குகள் இந்து வழக்கப்படி செய்யப்பட்டன.
இந்து மதத்தின் தீவிரப் பின்பற்றுபவரான கிராப்லெவ், 18 ஆண்டுகளாக கோகர்ணாவுக்குத் தொடர்ந்து சென்று வந்தார். வாரணாசியில் ஆன்மீகத் தீட்சையும் பெற்றார்.
ஆபத்துகள் இருந்தபோதிலும், சமீபத்தில் மீண்டும் ரஷ்ய ராணுவப் பணிக்குத் திரும்பினார். இந்நிலையில், ஏப்ரல் 28 அன்று போரில் கொல்லப்பட்டார்.
அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்கு வர முடியாததால், இறுதிச் சடங்குகளை வி. பிரசாந்த் ஹிரேகங்கே என்ற இந்து மதகுரு மூலம் நடத்தினர்.
அதே நேரத்தில் கிராப்லெவின் உறவினர் எலெனா வீடியோ அழைப்பு மூலம் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.
ஸ்ரீ மகாபலேஷ்வரர் கோயில், 4 ஆம் நூற்றாண்டில் கடம்ப வம்சத்தினரால் கட்டப்பட்ட ஒரு கோவிலாகும்.
இது ஏழு முக்திஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கார்வார் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கோயில் குறிப்பிடத்தக்க ஆன்மீக, கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிக அளவில் செல்கின்றனர்.
Trending
- அரசவங்கி ஊழியர்களின் ஒன்றினைந்த தொழிற்சங்கம் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
- சமூக செயற்பாட்டாளர் கேரள கஞ்சாவுடன் கைது
- 62ஆயிரம் இளைஞர்கள் அரச சேவையில் இணைப்பு
- நேபாளத்திலுள்ள 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறும் வாய்ப்பு
- எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது : வலுசக்தி அமைச்சர்
- மீகொட துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பலி
- பிரியந்த வீரசூரியவை ஐஜிபியாக அங்கீகரித்தது அரசியலமைப்பு சபை
- அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பு