கனடாவின் லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து இந்திய-கனடிய அரசியல்வாதியான ரூபி தல்லா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த முடிவு நாட்டின் அடுத்த பிரதமராகும் அவரது முயற்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
தகுதி நீக்கம் குறித்து தல்லா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, இது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த முடிவு ஊடகங்களுக்கு கசிந்ததாகவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
தனது அதிகரித்து வரும் ஆதரவு கட்சியில் சில சிலருக்கு அச்சுறுத்தலாக மாறியதாக தல்லா சூசகமாகக் கூறினார். வெளிநாட்டு தலையீடு மற்றும் பிரச்சார விதி மீறல்களில் ஈடுபட்டதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவை சக வேட்பாளர் மார்க் கார்னியுடன் விவாதம் செய்வதைத் தடுக்கும் முயற்சிகள் என்று அவர் நிராகரித்தார்.
தல்லாவின் அரசியல் பயணம் மற்றும் பிரச்சார வாக்குறுதிகள்
கடந்த ஜனவரி மாதம் ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, தல்லா தனது வேட்புமனுவை றிவித்அதார்தாக்கல் செய்தார். சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதாகவும், மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதாகவும் அவரது பிரச்சாரம் இருந்தது.
முன்னதாக, அவர் 2004-2011 வரை பிராம்ப்டன்-ஸ்பிரிங்டேலின் எம்பியாக இருந்தார்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், கனடியர்களுக்காக தொடர்ந்து போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டை தல்லா மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியா தனது பிரச்சாரத்தில் தலையிடுவதாக கனடா ஊடக அறிக்கைகளை தல்லா நிராகரித்த ஒரு நாளுக்குப் பிறகு இது நடந்தது குறிப்பிடத்தக்கது.
Trending
- மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகத்திற்கு புதிய செயலாளர்
- வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டார்
- நியூசிலாந்து துணைப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்
- யாழ்ப்பாணத்தில் 2ம்சங்கிலியமன்னனின் 406 ஆவதுநினைவு தின அஞ்சலி
- பிரதமருக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல்
- யாழில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
- சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு
- சங்கிலியனின் 406 ஆவது சிரார்த்த தினம்