இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 14 எம்.பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்தது அம்பலமானதால், எதிர்க்கட்சித் தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
NDA வேட்பாளராக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அவருக்கு எதிராக INDIA கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் மட்டுமே பெற்றார்.15 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
மொத்த 781 வாக்காளர்களில், 14 பேர் வாக்களிக்கவில்லை.
இவர்களில் பிஜூ ஜனதாதளம் (7), பி.ஆர்.எஸ். (4), அகாலி தளம் (1), சுயேச்சை எம்.பிக்கள் (2) ஆகியோர்.
NDA கூட்டணியின் கணிப்புப்படி, கூட்டணியின் மொத்த வலிமை 427 வாக்குகள்; YSR காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பிக்கள் ஆதரவு கூட சேர்த்தாலும், 438 வாக்குகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்றதைத் தொடர்ந்து, கூடுதலாக 14 எம்.பிக்கள் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து விலகி வாக்களித்துள்ளது உறுதியானது.
இதையடுத்து, அந்த 14 எம்.பிக்கள் யார் என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஜார்க்கண்ட் , மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கவர்னராக பணியாற்றிய அனுபவம் உள்ள ராதாகிருஷ்ணனுக்கு, அந்த மாநில எம்.பிக்களுடன் நெருக்கம் இருந்தது என்பதால், அவர்களே வாக்களித்திருக்கலாம் என்று ஒரு பாஜக நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார்.