இந்தியாவில் சைபர் குற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் 31.2% என்ற மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்புக்கு மோசடி, மிரட்டி பணம் பறித்தல் , பாலியல் சுரண்டல் ஆகியவை முக்கியமானதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2022 இல் 65,893 இல் இருந்து 2023 இல் 86,420 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மிகவும் பொதுவான சைபர் குற்றமாக மோசடி தொடர்பான குற்றங்கள் உருவெடுத்துள்ளன. இது அனைத்து சம்பவங்களிலும் 68.9% (59,526 வழக்குகள்) ஆகும்.
இது டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த வளர்ந்து வரும் கவலைகளையும், நாடு முழுவதும் மேம்பட்ட சைபர் கண்காணிப்பின் அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுகிறது.
2023 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து சைபர் குற்றங்களிலும், பாலியல் சுரண்டல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் முறையே 4.9% (4,199 வழக்குகள்) மற்றும் 3.8% (3,326 வழக்குகள்) ஆகும்.
சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா, தெலுங்கானா ஆகியவை முதலிடத்தில் உள்ளன