2025 சம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, ஜோஸ் பட்லருக்குப் பதிலாக, இங்கிலாந்து ,வேல்ஸ் கிரிக்கெட் சபை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் ,ரி20 கப்டனாக ஹாரி புரூக்கை நியமித்துள்ளது.
இங்கிலாந்தின் ஒயிட் பால் கிரிக்கெட்டை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க தலைமை மாற்றமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்காலிகமாக இங்கிலாந்துக்கு கப்டனாக இருந்த 26 வயதான ஹாரி புரூக், இப்போது ஒருநாள் ,ரி20 என இரண்டு வடிவங்களிலும் அணியை நிரந்தரமாக வழிநடத்துவார்.
ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் தலைமை தாங்கவில்லை என்றாலும், ஹாரி புரூக் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழிநடத்தி உள்ளார்.அந்த 5 போட்டிகளில் மூன்று போட்டிகளில் தோல்வியும், இரண்டு போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளன.