முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனும், கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர் சானியா சந்தோக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா, விரைவில் டெண்டுல்கர் குடும்பத்தின் மருமகளாக மாறவுள்ளார். நிச்சயதார்த்தம் முற்றிலும் தனிப்பட்ட முறையில், குடும்பத்தினர் ,நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சானியா பிரபல தொழிலதிபர் ரவி காய் பேத்தி. அர்ஜுனின் நிச்சயதார்த்தம் மிகவும் ரகசியமாக நடைபெற்றது. சானியா அர்ஜுனின் பால்ய தோழி. சானியாவின் தந்தை ரவி காய் சச்சின் டெண்டுல்கரின் நண்பரும் ஆவார். நிச்சயதார்த்த விழா அதிக ஆடம்பரமாக நடத்தப்படவில்லை என்றும் இரு குடும்பங்களின் நெருங்கிய உறுப்பினர்களும் ஒரு சில நண்பர்களும் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சானியாவின் குடும்பம் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்களின் குடும்பம். சானியாவின் குடும்பம் இன்டர்காண்டினென்டல் மரைன் டிரைவ் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி (குறைந்த கலோரி ஐஸ்கிரீம் பிராண்ட்) ஆகியவற்றை வைத்திருக்கிறார். இந்திய அரசின் கார்ப்பரேட் விவகாரத் துறையின் தகவல்களின்படி, சானியா சந்தோக், திரு.பாவ்ஸ் பெட் ஸ்பா மற்றும் ஸ்டோர் எல்எல்பியின் நியமிக்கப்பட்ட பார்ட்னராகவும் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.