Wednesday, March 19, 2025 6:25 am
பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட இராமநாதன் அர்ச்சுனா எம்பின் உரையை ஒளிபரப்ப சபாநாயகர் இன்று தற்காலிகத் தடை விதித்துள்ளார்.
அர்ச்சுனாவின் செயற்பாடுகளும், வார்த்தைகளும் தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு நான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன் என சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன், அர்ச்சுனா எதிர்வரும் மே மாதம் வரை பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையை நேரடியாக ஒளிப்பரப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பாராளுமன்ற உரையை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது எனவும் சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் பயன்படுத்தியுள்ள சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அனைத்தையும் ஹன்சாட் பதிவில் இருந்து நீக்குமாறும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு பெண்களை மிக கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். இது பாராளுமன்ற கெளரவத்தை அவமதிப்பதாகும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

