மரண தண்டனைகள் குறித்த அம்னஸ்டி இன்டர்நேஷனலின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 1,518 பேருக்கு மரணதண்டனை நிறவேற்றப்பட்டது.
ஈரான், ஈராக்,சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் 1,380 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
உலகளவில் இது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் அதிகபட்ச மரணதண்டனை எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டின் (2023) எண்ணிக்கையை விட 32% அதிகமாகும், இது முந்தைய ஆண்டை விட மரணதண்டனை அதிகரிப்பைக் குறிக்கிறது.
சீனா, வட கொரியா, வியட்நாம் , பாலஸ்தீனம் ,சிரியாவில் நடந்து வரும் நெருக்கடிகள் காரணமாக, ஆயிரக்கணக்கான சந்தேகத்திற்குரிய மரணதண்டனைகள் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.
ஈரானில் மட்டும் 64% நிறைவேற்றப்பட்டது, குறைந்தது 972 பேர் தூக்கிலிடப்பட்டனர்.இது முந்தைய ஆண்டை விட 100க்கும் மேற்பட்ட அதிகரிப்பு ஆகும்.
தலை துண்டிக்கும் தண்டனையை நடைமுறைப்படுத்தும் சவூதி அரேபியா, அதன் ஆண்டு மொத்த எண்ணிக்கையை 172 இல் இருந்து 345 ஆக இரட்டிப்பாக்கியுள்ளது.
ஈராக் அதன் மரணதண்டனைகளை குறைந்தது 16 இல் இருந்து குறைந்தது 63 ஆக கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்த்தியுள்ளது என்று அம்னஸ்டி தெரிவித்துள்ளது.
சில மாநிலங்கள் போராட்டக்காரர்கள் மற்றும் இனக்குழுக்களுக்கு எதிராக மரண தண்டனையை “ஆயுதமாக” பயன்படுத்துகின்றன என்றும் உரிமைகள் குழு கூறியது.
2022 ஆம் ஆண்டு “பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்” போராட்டங்களில் பங்கேற்றவர்களைத் தண்டிக்க ஈரான் மரண தண்டனைகளைப் பயன்படுத்துவதில் “தொடர்ந்து” ஈடுபட்டதாகவும், இதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் உட்பட பலர் ஈடுபட்டதாகவும் அது கூறியது.
அரசியல் எதிர்ப்பை நசுக்கவும், அதன் ஷியைட் சிறுபான்மையினரை தண்டிக்கவுமே சவுதி அரேபியா மரண தண்டனையை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அம்னஸ்டி தெரிவித்துள்ளது.