பாலஸ்தீன பிரச்சினை, காஸா தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை நிவர்த்தி செய்வதற்காக 27 ஆம் திகதி கெய்ரோவில் அவசர அரபு உச்சி மாநாடு நடைபெறும் என்று எகிப்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உச்சிமாநாட்டைக் கோரிய பாலஸ்தீனம் உள்ளிட்ட அரபு நாடுகளுடன் எகிப்தின் உயர்மட்ட ஆலோசனைகள் மற்றும் அரபு லீக் (AL) உச்சிமாநாட்டின் தற்போதைய தலைவர் மற்றும் AL செயலகத்துடன் ஒருங்கிணைப்புக்குப் பிறகு இந்த உச்சிமாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம்பெயரச் செய்யும் அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ட்ரம்ப் இதற்கு முன்பு இதேபோன்ற திட்டங்களை முன்வைத்துள்ளார், அவற்றை எகிப்து , ஜோர்தான் ஆகிய இரண்டு நாடுகளும் வெளிப்படையாக நிராகரித்தன, பாலஸ்தீனியர்களின் எந்தவொரு கட்டாய இடப்பெயர்ச்சிக்கும் தங்கள் எதிர்ப்பை மீண்டும் அவை உறுதிப்படுத்தின.
Trending
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி