அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ரத்தினகிரிக்கும் டாபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.