அமெரிக்க ரயில்களில் ஒரு தீவிர பாதுகாப்பு பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ஹேக்கர்கள் ரயில்களின் பிரேக்குகளை தொலைவிலிருந்து முடக்க அனுமதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் குறைபாட்டை முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு, சுயாதீன ஆராய்ச்சியாளர் நீல் ஸ்மித் கண்டுபிடித்தார்.ரேடியோ அலைவரிசைகள் மூலம் இதைப் செய்யலாம் என அவர் கண்டறிந்தார்.
அமெரிக்க சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (CISA) இந்த ஆபத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனை ரயில்வே துறை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அறிந்திருந்தாலும், சமீபத்தில்தான் இதை நிவர்த்தி செய்யத் தொடங்கியது.
இந்தச் ஹேக்கை உருவாக்கத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஏற்கனவே இணையத்தில் கிடைக்கின்றன என்பதை ஸ்மித் வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் அதை உருவாக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த பாதிப்பை வேறொரு நாட்டிலிருந்து இணையம் வழியாகப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், அதன் ஹேக் சிக்னலை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்கு ரயிலுக்கு ஓரளவு அருகாமையில் இருப்பது அவசியமாகும்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தப் பாதிப்பு குறித்து அறிந்திருந்தாலும், ரயில்வே துறை சமீபத்தில்தான் அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.