ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் போது, அத்தியாவசிய தொழில்களை குறிவைத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) “மேம்பட்ட” சைபர் தாக்குதல்களை நடத்தியதாக வடகிழக்கு நகரமான ஹார்பினில் உள்ள சீன பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மூன்று NSA முகவர்களை தேடப்படும் பட்டியலில்பொலிஸார் சேர்த்தனர், மேலும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் வர்ஜீனியா டெக் ஆகியவை தாக்குதல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
NSA முகவர்கள் கேத்ரின் ஏ. வில்சன், ராபர்ட் ஜே. ஸ்னெல்லிங் மற்றும் ஸ்டீபன் டபிள்யூ. ஜான்சன் என ஜின்ஹுவாவால் அடையாளம் காணப்பட்டனர். இந்த மூவரும் “சீனாவின் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பில் மீண்டும் மீண்டும் சைபர் தாக்குதல்களை நடத்தியதாகவும், ஹவாய் , பிற நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல்களில் பங்கேற்றதாகவும்” கண்டறியப்பட்டது.