நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை (UNGA) கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் ஜனாதிபதி அரசுமுறைப்பயணம் செல்ல திட்ட மிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வெளிநாட்டுப்பயனம் தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிக்கையில்,
செப்டம்பர் 23 ஆம் திகதி அமெரிக்காவுக்குச் செல்லும் ஜனாதிபதி 24 ஆம் திகதி நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவார், வெளியுறவுக் கொள்கை உட்பட தனது அரசாங்கத்தின் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுவார். அமர்வுகளின் போது அவர் பல உலகத் தலைவர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நியூயார்க்கிலிருந்து, ஜனாதிபதி திசாநாயக்க செப்டம்பர் 27 ஆம் திகதி ஜப்பானின் ஒசாகாவிற்கு எக்ஸ்போ 2025 இல் கலந்து கொள்ளவும், இலங்கை தினத்தில் பங்கேற்கவும் பயணம் செய்வார், அங்கு நாட்டின் கலாசாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்துவார்.
பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், ஜப்பானுக்கான அரசு முறைப் பயணம் செப்டம்பர் 28 ஆம் திகதி தொடங்கும்.