ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, பதிலளித்தவர்களில் 52% பேர் உக்ரைனை ‘தனிப்பட்ட முறையில் ஆதரிப்பதாகக்’ கூறுகிறது
வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் டொனால்ட் ட்ரம்ப் ,ஜெலென்ஸ்கி ஆகியோருக்கிடையேயான இராஜதந்திர முறிவிற்கு முன்னர் நடத்தப்பட்ட அமெரிக்க கருத்துக் கணிப்பில் , 2022 உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு, கணக்கெடுக்கப்பட்ட அமெரிக்கர்களில் 4% பேர் மட்டுமே ரஷ்யாவை ஆதரிப்பதாகக் கண்டறிந்துள்ளது – ஆனால் 44% பேரில் ஒரு பெரும் சிறுபான்மையினர் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பெப்ரவரி 26 ஆம் திகதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் , ஒப்பீட்டளவில் 52% பேர் – உக்ரைனை “தனிப்பட்ட முறையில் ஆதரிப்பதாக” கூறியுள்ளனர்.
ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சியினரிடையே ரஷ்யாவிற்கு அதிகபட்ச ஆதரவு 7% ஆக இருந்தது. அந்த குடியரசுக் கட்சியினரில் 56% பேர் இந்த இரண்டில் எதுவுமே தங்களுக்கு இல்லை என்றும், 37% பேர் உக்ரைனை ஆதரித்ததாகவும் தெரிவித்தனர் .
ஒட்டுமொத்தமாக – ட்ரம்பின் நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் உக்ரைனுக்கு சாதகமாக இருப்பதாக 11% பேர் நம்புவதாகவும், 46% பேர் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது .
Trending
- ஐரோப்பிய விமான வழித்தடத்தை மாற்றியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
- ஈரான் வான்வெளி மூடப்பட்டதால் ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதிப்பு
- “ரஜ உப்பு” ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
- அவசரமாகத் தரை இறங்கிய ஏர் இந்திய விமானம்
- போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது இலங்கை
- யாழ்ப்பாண மேயரானார் மதிவதனி
- உலகளவில் அதிகரித்தது எண்ணெய் விலை
- ஆலய நிதி உதவியுடன் கட்டப்பட்ட வார்ட் திறக்கப்பட்டது