கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் அனுமதி இல்லாமல் மரக்குற்றிகளை சூட்சுமமாக வாகனத்தில் கடத்திச் சென்ற ஒருவரை நேற்று திங்கட்கிழமை [17]க் கைது செய்த கொடிகாமம் பொலிஸார் வாகனத்தையும் கைப்பற்றினர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரணசிங்கவின் வழிகாட்டலில், போக்குவரத்து பிரிவுப் பொறுப்பதிகாரி உதவிப்பொலிஸ் பரிசோதகர் நிலந்த , போக்குவரத்துப் பிரிவு உதவிப் பொறுப்பதிகாரி தம்பிராஜா தர்மரத்தினம் ஆகியோர் எழுதுமட்டுவாள் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டனர்.
சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேம்பு, நாவல் மரக் குற்றிகளையும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை