180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகஅரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கிறது
மத்திய மருந்துக் கடையில் வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் , நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் உட்பட 180 அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 50 க்கும் மேற்பட்டவை மருத்துவமனைகளிலும் பற்றாக்குறையாக உள்ளன. முக்கியமான புற்றுநோய் மருந்து பல மாதங்களாக பற்றாக்குறையாக உள்ளது, இது நோயாளிகளின் சிகிச்சையை மட்டுப்படுத்துகிறது.