செம்மணியில் மனித புதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது.
இதேவேளை, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் சுழற்சி முறையிலான உண்ணாவிரதமும் அந்த தூபியில் விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டு பின்னர் இறுதி நாளிலும் தீபம் ஏற்றி உண்ணாவிரம் நிறைவு செய்யப்பட்டது.
நேற்று (08.10.2025) செம்மணியில் இருந்த சிறு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவமானது போராட்டத்தை முடக்குவதை நோக்காக கொண்டதா இல்லை மக்களை அச்சத்தை ஏற்படுத்துவதா என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர்.
அநியாயத்திற்கு எதிரான குரலாக அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபிக்கே அநியாயம் ஏற்பட்ட விடயம் மக்கள் மத்தியில் விசனத்தையும், மிகுந்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன்
இவ் அணையா விளக்கு தூபி உடனடியாக புனரமைப்பு வேலை திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை