மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ்ப்பாண மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனக் குற்றம் சாட்டிய தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் மனு நிராகரிப்புக்கு எதிராக வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகத் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.
இதில் யாழ்ப்பாண மாநகர சபையின் பெண் வேட்பாளரது உறுதியுரை விடயம் தொடரிலான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம்.
எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.சட்ட ஆலோசகர்களுடன் நாம் இந்த விடயம் தொடர்பாக நாம் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.
அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவுப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா.தலைவர் கண்டனம்