பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கின் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்கும் முடிவு, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டி, ஊடகங்களும் , சிவில் உரிமை ஆர்வலர்களும் கடுமையான விமர்சனங்களைப்வெளியிட்டுள்ளன.
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநருக்கு, வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது என்று ஜனவரி 27 ஆம் திகதி தெரிவித்தார்.
அந்தக் கடிதத்தின்படி, முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, முன்னாள் கல்கிஸ்ஸை குற்றப்பிரிவுப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. திஸ்ஸசிறி சுகதபால, முன்னாள் டி.ஐ.ஜி. பிரசன்ன நாணயக்கார ஆகியோர் விடுவிக்கப்படலாம்.
பொறுப்புக்கூறலை உறுதி செய்ய சட்டமா அதிபர் ரணசிங்க தவறிவிட்டதாக உரிமைகள் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன. கொல்லப்பட்ட விக்கிரமதுங்கேவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளன.
இளம் பத்திரிகையாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு சட்டமா அதிபர் துறைக்கு முன்னால் நடைபெற உள்ளது.
சட்டமா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான உத்தரவுகள் குறித்து வெளிப்படைத்தன்மையை ஏற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.
Trending
- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு
- யானைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – ராகுல தேரர்
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி