இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ்ப்பாணஊடக அமையத்தில் ஞாயுற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தின் பங்களிப்புடன் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த அஞ்சலிக்கூட்டத்தில் ஊடகத்துறையினர், அரசியல்வாதிகள், பொது அமைப்புகள் வரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
இடதுசாரி கொள்கையை கொண்ட, 1949 முதல் 2025 வரையான அவரது வாழ்க்கை வரலாற்றில் சுமார் 35 வருட காலமாக இலங்கையின் இதழியல் துறையில் மட்டுமின்றி நாட்டின் அரசியல் சமூகத்திலும் தனக்கென்று ஒரு இடத்தை வகுத்து துணிச்சலுடன் செயற்பட்டு வந்த விக்டர் ஐவன் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி காலமானார்.
